நாகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வினியோகம்
வருகின்ற 12 ஆம் தேதி வரை 2 லட்சத்து 15 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தகவல் தெரிவித்தார்.
HIGHLIGHTS
பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் முதலமைச்சரால் இன்று துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாகையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. நாகை மாவட்டம் முழுவதும் வருகின்ற 12 ஆம் தேதி வரை 2 லட்சத்து 15 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர், கெளதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.