/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கிருஷ்ணகிரியில், தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொமுச நிர்வாகிகள் பரமசிவம், ஜேக்கப்ராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வும், தொமுச கவுரவத் தலைவருமான செங்குட்டுவன் பங்கேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 9 July 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  4. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  5. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  7. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  9. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்