Begin typing your search above and press return to search.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2.12 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 2.12 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அலுவலரான நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அன்பரசன் தலைமையில் போலீசார் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்திருந்தனர்.
அப்போது ஜகன் என்பவர் பெங்களூர் சாலையில் இருந்து பழையபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரது காரை நிறுத்தி பறக்கும்படையினர் சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 200 வைத்திருந்தது தெரிந்தது.
இதே போல் பெங்களூரில் இருந்து நாமக்கலை நோக்கி காரில் சென்ற கொண்டிருந்தவர், உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.59 ஆயிரத்து 500ஐயும் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 700ஐ, கிருஷ்ணகிரி தேர்தல் நடத்தும் அலுவலரான கற்பகவள்ளி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.