/* */

பொதுமக்கள் குறைதீர்க்க வாரம் தோறும் மக்கள் சபை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் மக்கள் சபை கூட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்

HIGHLIGHTS

பொதுமக்கள் குறைதீர்க்க வாரம் தோறும் மக்கள் சபை: அமைச்சர் செந்தில் பாலாஜி
X

கரூரில் இன்று தொடங்கப்பட்ட மக்கள சபை கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டத்தில் மக்கள் சபை கூட்டம் என்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்களின் பல்வேறு அடிப்படை குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக கரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் சபை கூட்டம் வாரம்தோறும் நடத்தப்பட உள்ளது. இதில் அரசு உயர் அதிகாரிகள் கொண்ட குழு மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, உடனடியாக தீர்வு காணக்கூடிய மனுக்கள் மீது அந்த இடத்திலேயே தீர்வு காணப்படும்.

மேலும் மக்கள் சபை கூட்டத்தில் பெறப்பட்ட மற்ற மனுக்கள் மீது 30 நாட்களும் தீர்வு காணப்பட்டு மக்களின் குறைகளை நிறைவேற்றப்படும் என கூறினார்.

கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி அளிக்கும் திட்டத்தையும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

Updated On: 27 Jun 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.