கரூர் 23 வது வார்டு அதிமுக வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு
கரூரில் அசத்தி வரும் அதிமுக இஸ்லாமிய பெண் வேட்பாளர் பாத்திமா சாகுல்அமீது அவர்களின் நூதன தேர்தல் பிரச்சாரம்.
HIGHLIGHTS
கரூரில் அசத்தி வரும் அதிமுக இஸ்லாமிய பெண் வேட்பாளர் பாத்திமா சாகுல்அமீது அவர்களின் நூதன தேர்தல் பிரச்சாரம்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் பாத்திமா சாகுல் அமீது., கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒருவார்டினை கூட சிறுபானமையினருக்கு ஒதுக்காத திமுக கட்சியினரிடையே அதிமுக சார்பில், 23 வது வார்டினை மறைந்த முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் சாகுல் அமீது அவர்களின் மகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக தலைமை சீட் கொடுத்துள்ளது.
இந்நிலையில், இன்று நல்லதங்காள் ஓடை பகுதியிலும், வடக்கு காசீம் தெரு, மைதீன் சந்து, ஈஸ்வரன் ஆலய வடபுறம் பகுதியிலும், பசுபதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகளையும், தற்போது திமுக அரசு சொன்னதை செய்யாத திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்து வருகின்றார். மேலும், ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மகளீருக்காக செய்த சாதனைகளையும், அவரது காலத்திலும் சரி, அவரது மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது 4 ½ வருட கால ஆட்சியின் சாதனைகளையும் சேர்த்து மொத்தம் 10 வருட ஆட்சியில் தமிழகம் பொற்காலமாக இருந்தது என்றும் கூறி ஆங்காங்கே துண்டு பிரசூரங்கள் வழங்கி வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
மேலும், அதிகளவில் இஸ்லாமியர்கள் வசிக்கும் அவரது பகுதியில், சிறுபான்மையினருக்காக போராடுவதாக கூறும் திமுக ஏன் இஸ்லாமிய மக்களுக்கு என்று சீட் ஒதுக்கவில்லை என்று கேள்விக்கனைகளோடு வாக்குகள் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றார். மேலும், இவர், அதிமுக கட்சியில், கரூர் மாவட்ட அதிமுக இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட இணை செயலாளராகவும் இருந்து வருகின்றார். மேலும், இவரது சகோதரர் சேக் சாகுல் அமீது கரூர் மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு இணை செயலாளரும், வழக்கறிஞருமாக இருந்து வரும் நிலையில், ஏராளமான சிறுபான்மையினர் மற்றும் மக்களின் ஆதரவோடு ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரத்தில் தனிக்கவனமாக ஈர்த்து வருகின்றது இவரது பிரச்சாரம்.