Begin typing your search above and press return to search.
நூறு நாள் வேலைத்திட்டம்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
குளித்தலையில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி தரவில்லை என வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திம்மம்பட்டி ஊராட்சி ரெத்தினம் பிள்ளை புத்தூரில் கடந்த 2 மாதங்களாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தங்கள் பகுதி மக்களுக்கு மட்டும் ஊராட்சி நிர்வாகம் பணி வழங்காமல் இருந்து வருவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை யூனியன் இன்ஜினியர் செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நாளை முதல் தங்கள் பகுதி பொதுமக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை தருவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.