10 ஆண்டு குடிநீர் திட்டம்; அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
கரூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை தயார் செய்யும்படி மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
HIGHLIGHTS
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கரூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு தடையில்லாத குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இரண்டு நாள்களுக்கு ஒரு முறை தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை செம்மையாக செயல்படுத்துவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.