கரூரில் மொழிப் போர் தியாகிகளுக்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை
கரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
HIGHLIGHTS
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு தமிழ் மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப் போர் தியாகி நினைவு முன்னிட்டு மொழிப் போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் எ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணைச்செயலாளர் சிவசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் திரு வி க, மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் திருநாவுக்கரசு, மத்திய நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் எம்.ஆர்.கே.செல்வகுமார், மார்கண்டேயன், கலையரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.