/* */

நியாய விலை கடை பணி ரூ 5 லட்சத்திற்கு விற்பனை: இளைஞர் உள்ளிருப்பு போராட்டம்

குமரியில் நியாயவிலை கடை பணியாளர் ஆணை ரூ 5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக இளைஞர் குற்றம் சாட்டினார்.

HIGHLIGHTS

நியாய விலை கடை பணி  ரூ 5 லட்சத்திற்கு  விற்பனை: இளைஞர் உள்ளிருப்பு போராட்டம்
X

மாவட்ட கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலகம் முன்பு அதிகாரிகளின் முறைகேட்டை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூட்டேற்றி பகுதியை சேர்ந்த இளைஞர் ரமேஷ்.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் பணிபுரிய பணி ஆணை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பெரும் தொகையை கொடுப்பவர்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலகம் முன்பு அதிகாரிகளின் முறைகேட்டை கண்டித்து, பூட்டேற்றி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நியாய விலை கடைகளில் பணியாளர் நியமனத்துக்கு 5 லட்சத்திற்கு விற்கப்படுவதாகவும், நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற தன்னால் பணம் கொடுக்க முடியாததால், தனக்கு கிடைக்க வேண்டிய பணியை வேறு நபருக்கு அதிகாரிகள் விற்பனை செய்து விட்டனர்.மேலும், 2018 ஆம் ஆண்டு முதலே பணி ஆணை வழங்குவதாக கூறி ஏமாற்றும் அதிகாரிகள் குறித்து முதலமைச்சர் தனி பிரிவிற்கு மனு அளித்தும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தனக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டதாவும் இளைஞர் ரமேஷ் தெரிவித்தார். இந்தப் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 22 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’