Begin typing your search above and press return to search.
கிராம ஊராட்சி தலைவர்பதவிக்கு ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பெண்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆர்வமுடன் தங்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கியது. முதல் நாளில் 32 மனுக்களும், இரண்டாம் நாளான நேற்று 362 வேட்பு மனுக்களையும் 5 ஒன்றியங்களில் தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சி தலைவர் வேட்பாளராக 137 பெண் வேட்பாளர் போட்டியிட ஒதுக்கீடும், கூடுதலாக பொதுப் பிரிவிலும் பெண்கள் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் அதிக மகிழ்ச்சியுடன் போட்டியிட ஆர்வமாக ஒன்றிய அலுவலகங்களில் இன்று தங்கள் வேட்புமனுக்களை ஆதரவாளர்களுடன் வந்து தாக்கல் செய்து வருகின்றனர்.
இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் அதிக அளவில் பெண்கள் போட்டியிட மனுதாக்கல் செய்ய இந்த முறை வாய்ப்பு உள்ளது.