காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழியுடன் வைகுந்த பெருமாள் பல்லக்கில் வீதியுலா
Vaikunta Perumal Temple Kanchipuram - காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழியுடன்வண்ண மலர் அலங்காரத்துடன் பல்லக்கில் வைகுந்த பெருமாள் வீதியுலா வந்தார்.
HIGHLIGHTS
VaikuntaPerumal Temple Kanchipuram- கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ்பெற்ற திருக்கோயில் அருள்மிகு கமலவல்லி ஸமேத வைகுந்தப் பெருமாள் திருக்கோயில். ஸ்ரீ பரமேச்சுவர விண்ணகரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 26 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் 28ஆம் தேதி கருட சேவை நிகழ்ச்சியும் நேற்று தேர்த்திருவிழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நாள்தோறும் காலை , மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அவ்வகையில் இன்று எட்டாம் நாள் காலை வைகுந்தப்பெருமாள் வெண்ணைத்தாழியுடன் வண்ண மலர் அலங்காரத்துடன் தன் அழகை எதிரே உள்ள நிலை கண்ணாடியில் ரசித்தவாறு பல்லக்கில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி எம்பெருமானை வழிபட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2