காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் திருக்குளம் சீரமைப்பு பணி
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் திருக்குளம் தொல்லியல் துறை சார்பாக புனரமைக்கப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நகரில் பல்வேறு சைவ வைணவ தலங்கள் அமைந்துள்ளது. கனத்த மழை பெய்யும் காலங்களில் இக் குளங்கள் நிரம்பி வழிந்து பக்தர்களுக்கு வழிபாட்டிற்கும் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு நீராதாரமாக விளங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பரில் பெய்த கன மழையில் கூட வைகுண்ட பெருமாள் திருக்குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கோவில் வெளியில் குளம் உள்ளது.
தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த கோவில் குளம் சுற்றுச்சுவர் படிக்கற்கள் பெயர்ந்து இருந்தன.அவற்றை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கோவில்கள் அனைத்திலும் குளங்கள் உள்ளன. அந்தந்த குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வழிகள் முறையாக அமைக்கப்பட்டிருந்தன.
நகர் பகுதி விரிவாக்கத்தின் போது கோவில் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டன. அதில், வைகுண்ட பெருமாள் கோவில் குளமும் ஒன்று. இருந்தாலும் கோவில் குளத்தில் உள்ள படிக்கட்டுகள் சில இடங்களில் பெயர்ந்து இருந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.