இருசக்கர வாகன திருடன் கைது - 8 வாகனங்கள் பறிமுதல்
காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய ராஜ்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனம் காணாமல் போனது. இது தொடர்பாக காணாமல் போகும் இரு சக்கர வாகனங்களை கண்டுபிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் உத்தரவிட்டார். அதன்பேரில் விட்டு காஞ்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நகர் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பெண் படையினரின் தேடுதல் வேட்டையில் சின்ன காஞ்சிபுரம் வேதாந்தம் தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மீது சந்தேகம் எழுந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட போது வாகனத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 8 இருசக்கர வாகனங்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை விரைவாக கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பாராட்டினர்.