காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது
காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே கஞ்சா போதையில் போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் சேகர். இவர் ஆதி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள செங்கழு நீரோடை வீதி சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்பொழுது தவறான வழியில் ஆட்டோவில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி கேட்டு உள்ளார். காஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் போக்குவரத்து காவலர் சேகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, திடீரென சேகரை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதில் நிலை குலைந்த நிலையில், கைகளில் காயம் அடைந்தவரை போக்குவரத்து காவலர் சேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, போக்குவரத்து காவலர் சேகரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சாதிக் , தீபக் என்ற இரு இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர்.