/* */

மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி..

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டு பொதுமக்கள் பயணிக்க தடை விதித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் நாளான இன்று அத்தியாவசிய கடைகள் தவிர பிற அனைத்தும் மூடப்பட்டது.

பொது மக்கள் பயணிக்கும் பேருந்து ,ஆட்டோக்கள்‌ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

அரசு ஊழியர்கள் ‌தங்கு தடையின்றி அலுவலகம் செல்ல காலை 6.00 மற்றும் 7.10 மணிக்கு இரு ரயில்கள் திருமால்பூரிலிருந்து காஞ்சிபுரம் வழியாக சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

இதேபோல் மாலை வேலைகளும் சென்னை கடற்கரையில் இருந்து இரயில்கள் காஞ்சிபுரம் வரை இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு , தாம்பரம். , பூந்தமல்லி வழி தடங்களில் அரசு ஊழியர்கள் சென்னை பணிக்கு செல்ல 10 சிறப்பு பேருந்துகள் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகிறது..

Updated On: 10 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...