பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
வாலாஜாபாத் அருகே, தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தை சேர்ந்தது புரிசை கிராமம். இக்கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், திடீரென காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அங்கு பணியாற்றி வந்த தலைமை ஆசிரியரை ஆனம்பாக்கம் பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்தார்.
இதனை அறிந்த பள்ளி மாணவ மாணவிகள், தேர்வு நிலையில் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்வதை கண்டித்து, நேற்று பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியிட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் சமாதானம் பேசி தற்காலிகமாக திட்டத்தை கைவிடுவதாக கூறியதன் பேரில் பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆனம்பாக்கம் பள்ளியில் பட்டியில் மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி வெளியானதால் அப்பள்ளி தலைமை ஆசிரியை புரிசை பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு , அங்கிருந்த தலைமையாசிரியர் ஆனம்பாக்கம் பள்ளிக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.