உள்ளாட்சித் தேர்தல் : வாக்குசாவடி முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆர்த்தி ஆய்வு
வாக்கு சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மா. ஆர்த்தி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 9 விடுபட்ட மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு எடுத்து வருகிறது.
இதில் முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் வாக்குசாவடி நிலவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் வாக்கு சாவடிகள் மாற்றம் அதில் உள்ள குறைகளை கலை தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐயம்பேட்டை முத்தியால்பேட்டை உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் மற்றும் ஊராட்சி செயலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.