2 வருடங்களாக உடலில் இருந்த இரும்பு துண்டு அகற்றம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சாதனை
கூலித்தொழிலாளியின் உடலில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்த 10செமீ இரும்பு துண்டை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் மற்றும் புற நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு தலைமை மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொதுமக்கள் தங்கள் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூலி தொழிலாளி விபத்தில் சிக்கியபோது தொடைப்பகுதியில் சுமார் பத்து சென்டிமீட்டர் அளவுள்ள இரும்புத் துண்டு ஒன்று சிக்கியிருந்தது. இவருக்கு அதிக அளவில் தொடர் வலி இருந்ததைக் கண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை எலும்பியல் பிரிவில் சிகிச்சைக்கு வந்தார்.
அவரை முழுவதுமாக பரிசோதித்த எலும்பில் மருத்துவ நிபுணர்கள் அவரது தொடை பகுதியில் இருந்த இரும்புத்துண்டு குறித்து அவருக்கு தெரிவித்து அறுவை சிகிச்சை மூலம் மிக நேர்த்தியாக அகற்றியுள்ளனர். இதுபோன்ற நேர்த்தியான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.