/* */

நத்தம் பட்டா வழங்க கோரி முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்தினர் மனு

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் கிராமத்தில் கடந்த 1998 இல் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை மூலம் 132 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நத்தம் பட்டா வழங்க கோரி முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்தினர் மனு
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்ற போது மனு அளித்த பொதுமக்கள் .

தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்தின் மாவட்ட சிறப்பு தலைவர் ராஜா, தலைவர் மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட பொது செயலாளர் ஜி. எஸ். சேகர், பொருளாளர் குமார் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் முகாமில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த தாவிதிர் சமுதாயத்தைச் சார்ந்த முடி திருத்துவோர் தொழிலாளர்களுக்கு என காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அப்போதைய காஞ்சிபுரம் ஆட்சியர் ஆணைப்படி 1998 ஆம் ஆண்டு பிற்படுத்த நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் மூலம் 132- பேருக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டது.

அதில் 23- பேர் வீடு கட்டி வசித்து வருகிறோம் மற்றும் உள்ள இடத்திற்கு 20 ஆண்டுகளாகியும் வரைபடத்தில் அடிமனையளவு படி கல்நட்டு இதுவரை தரவில்லை.அதனால் அனைவரும் பாதிப்படைகின்றனர்.

எங்களுக்கு ஆதிதிராவிடர் வட்டாட்சியர் மூலம் வழங்கிய பட்டாவை வருவாய்த்துறை வட்டாட்சியர் மூலம் கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது .

ஆனால் ஏற்கனவே பட்டா பெற்ற 132- பயனாளிகளுக்கு நத்தம் பட்டா கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் மாவட்ட ஆட்சித் தலைவர் வந்த பிறகு தான் வரைபடத்தை வருவாய் நத்தக் கணக்கில் சேர்த்து உள்ளீர்கள் .

ஆனால் எங்களுக்கு நத்தம் பட்டா வழங்கவில்லை ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எங்களுக்கு நத்தம் பட்ட வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறி உள்ளனர்.

Updated On: 19 Sep 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  2. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  3. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  4. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  5. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  7. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  8. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...
  9. ஈரோடு
    ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தை பைக் சாகசம், கார் பந்தயமாக...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 27ம் தேதி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்