ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு
டிஆர்பி கேமிங் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் சில உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன என்று ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவ் கூறினார்.
HIGHLIGHTS
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேமிங் மண்டலத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு குஜராத் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
"ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி மற்றும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறினார். .
ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவ் கூறுகையில், டிஆர்பி கேமிங் மண்டலத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது, மேலும் சில உயிரிழப்புகள் பற்றிய தகவல் உள்ளது. தீவிபத்துக்கான காரணத்தை அறிய முடியவில்லை. இது விசாரணைக்குரியது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் பல தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்புப் படை அதிகாரிகளிடம் பேசுவோம் என்று கூறினார்.
தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபின்பே, பலி எண்ணிக்கை தெரியவரும். தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. காணாமல் போனவர்கள் பற்றிய எந்த செய்தியும் எங்களுக்கு வரவில்லை. தற்காலிக கட்டிடம் என்பதால் தீயை அணைப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறோம்.
மண்டலத்திற்குள் இறந்தவர்களின் எண்ணிக்கையை (தீ கட்டுப்படுத்தப்பட்ட பிறகு) துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். தீ விபத்துக்கான காரணத்தையும் நாங்கள் ஆராய்வோம், மேலும் நகரத்தில் உள்ள அனைத்து கேமிங் மண்டலங்களுக்கும் மூடுமாறு செய்தி அனுப்பப்பட்டுள்ளது என கூறினார்