ரூ1.43 கோடி மதிப்பில் மாணவியர் விடுதிகளுக்கு எம்எல்ஏ. அடிக்கல்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கல்லூரி மாணவிகளுக்கான புதிய விடுதிகளுக்கு எம்எல்ஏக்கல் அடிக்கல் நாட்டினர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவியர் விடுதி செயல்பட்டு வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்ற வந்த நிலையில் விடுதி போதிய வசதியின்மை காரணமாக புதிய விடுதி கட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
புதிய ஆதிதிராவிடர் மாணவியர்கள் , கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதிகள் கட்டிடம் ரூபாய் 1கோடி 43 லட்சத்தில் அடிக்கல் நாட்டும் பணியினை ஆதிதிராவிடர் நலத்துறை வாரிய தலைவரும் எம்எல்ஏவுமான மதியழகன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் க சுந்தர் , கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சிவிஎம்பி எழிலரசன் ஆகியோர் இணைந்து கட்டிட பணியை துவக்கி வைத்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்டு கே ஆறுமுகம் , காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம். குமார் , மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ், அவைத்தலைவர் சந்துரு , துணை மேயர் திரு குமரகுருநாதன், மாநகராட்சி கவுன்சிலர் விஸ்வநாதன் , அன்பழகன் , மோகன் , சுரேஷ் , கமலக்கண்ணன் மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ் , ஒன்றிய பொருளாளர் தசரதன் நீலகண்டன் மற்றும் நகர நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.