Begin typing your search above and press return to search.
நிலை கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ரூ 72 000 பறிமுதல்
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி நெடுஞ்சாலை சந்திப்பில் நடைபெற்ற நிலை கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய்72000பணத்தை பறிமுதல் செய்தனர். .
HIGHLIGHTS
தமிழகத்தில் தேர்தல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும்படை சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பரந்தூர் பகுதியில் காமாட்சி தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டடனர்.
அப்போது உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 72.000 பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமியிடம் ஓப்படைத்தனர். அதன்பின் உரிய வழிமுறைகளை பின்பற்றி அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.