Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயராக குமரகுருநாதன் போட்டியின்றி தேர்வு
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட குமரகுருபரன், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 22வது வார்டு பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக ர.குமரகுருநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவி காங்கிரஸிற்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற குமரகுரு நாதன் துணை மேயர் பதவிக்கு இன்று மாலை நடைபெற்ற தேர்தலில் வேட்பு மனு அளித்தார். இத்தேர்தலில் 36 உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில் வேறு எவரும் போட்டியிட விருப்பம் இல்லாததால் போட்டியின்றி குமரகுரு நாதன் துணை மேயராக செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக , பாமக மற்றும் சுயேச்சை மூவர் என, மொத்தம் 14 பேர் கலந்து கொள்ளவில்லை.