திருக்கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை திறக்ககோரி காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயங்கள் முன்பு கற்பூரம் ஏற்றி இந்து முண்ணணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருக்கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்தது.
இந்நிலையில் தற்போது பரவல் குறைந்துள்ள காரணத்தால் போக்குவரத்து துவங்கிய நிலையில் பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள திருக்கோயில்களில் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உடனடியாக பொது மக்கள் தரிசனத்திற்காக திறந்து விடக் கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
அவ்வகையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம் மற்றும் வழக்கதீஸ்வரர் ஆலயம் முன்பு காஞ்சி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்ட இன்னும் முன்னிலையில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள இங்கு திருக்கோயில்களில் இருந்து பெறப்படும் உண்டியல் மற்றும் நில வருமானத்திலிருந்து பல லட்ச ரூபாய் செலவில் கொரோனா காலத்தில் உணவளிக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தபோது கோயில்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.