நகை வாங்கும் போது ரசீது கேட்டு வாங்குங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 200 தங்க ஆபர விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு தரமான தங்கங்களை வழங்கும் நோக்கில் மத்திய அரசு 2021முதல் தங்கநகை விற்பனை நிலையங்கள் ஹால் மார்க் வழி நடைமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் நகை விற்பனை நிலையங்களுக்கு விழிப்புணர்வு தரும் நோக்கில் மத்திய தர நிர்ணய அமைவன சென்னை பிராந்திய இணை இயக்குனர் ஜோஸ்சார்லஸ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஹால்மார்க் முத்திரை பெறுவது குறித்தும் தங்க நகை நிலைய உரிமையாளர்களுக்கு விளக்கப்பட்டது. பதிவேற்றம் குறித்து அவர்களின் சந்தேகங்களும் தெளிவுபடுத்தபட்டது. இக்கூட்டத்தில் வாயிலாக உரிமையாளர்கள் தர நிர்ணய வழிமுறைகளை பின்பற்றினால் கூடுதல் வாடிக்கையாளர் பெறலாம் எனவும், வாடிக்கையாளர்கள் தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் உள்ளிட்ட நான்கு வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டு உள்ளதா என்பதை கவனித்து பெறப்படும் தங்களுக்கு உரிய ரசீது பெற்றுக் கொண்டால் மட்டுமே குறைபாடுகள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது உறுதியாகும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் மோகன்லால், செயலாளர் இலஷ்மணகுப்தா உள்ளிட்ட நகை கடை உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.