காஞ்சிபுரத்தில் புதிய பொலிவுடன் உழவர் சந்தை: வியாபாரிகளின்றி பொதுமக்கள் ஏமாற்றம்
கடந்த திமுக ஆட்சியில் வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்காக உருவாக்கப்பட்ட உழவர் சந்தை தற்போது புதுப்பிக்கப்பட்டும் , வியாபாரிகள் வருகை குறைவால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
கடந்த திமுக ஆட்சியில் தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகளில் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் உழவர் சந்தை உருவாக்கப்பட்டது.
தங்கள் விளை நிலங்களில் பயிர் செய்யும் காய்கறிகளை நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய ஏதுவாகவும் , இதனால் கூடுதல் வருமானம் விவசாயிக்கு கிடைக்கும் எனும் நோக்கில் நகரங்கள் தோறும் உருவாக்கப்பட்டது.
இதேபோல் பொதுமக்கள் சுத்தமான காய்கறிகள் விலை குறைவாகவும் தரத்துடன் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் வாங்கி இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக மெல்ல மெல்ல உழவர்சந்தை பயனற்றுப் போயின.
தற்போது திமுக ஆட்சி ஏற்பட்டுள்ளதால் பழைய உழவர் சந்தைகளை புனரமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது.
இருப்பினும் காய்கறி விவசாயிகள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் காய்கறிகள் குறைந்த அளவே விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் வருகை குறைவாகவே உள்ளது.
தற்போது பொதுமக்கள் உடல் நலம் கருதி கீரை வகைகள் மற்றும் இயற்கை காய்கறிகளை நாடும் இந்நிலையில் தோட்டக்கலைத் துறையினர் இதை விவசாயிகளுக்கு நல் வாய்ப்பாக இருக்கும் என எடுத்துக்கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து உழவர் சந்தையை பயன் பெற செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.