/* */

காஞ்சிபுரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி கருகிய பயிருடன் வந்த விவசாயி

கோவிந்தவாடிஅகரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் 2 ஏக்கரில் நெல் பயிரிட்டு நிலையில் காலநிலை மாற்றங்களால் கருதியதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி கருகிய பயிருடன் வந்த விவசாயி
X

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் கருக்கி போனதால் இழப்பீடு வழங்க வேளாண்துறைக்கு பரிந்துரை செய்ய கோரிக்கை மனு அளிக்க கருகிய பயிருடன் வந்த விவசாயி  முனுசாமி.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் , கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய இரண்டு ஏக்கர் சொந்த நிலத்தில் சொர்ணவாரி பருவத்திற்கான நெல் பயிரிட்டு விவசாயம் மேற்கொண்டு வந்தார்.

இன்னும் அறுவடைக்கு 10 நாட்களே உள்ள நிலையில் 15 தினங்களுக்கு மழை மற்றும் வெயில் காரணமாக இரண்டு ஏக்கர் நெல் பயிர் முற்றிலும் கருகி சேதம் அடைந்துள்ளது.

இதனை கண்ட விவசாயி பெரிதும் மனம் உடைந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நெற்கதிர்களுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இடம் காண்பித்து வேளாண்துறை அலுவலர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இம்மனு வேளாண்துறை அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டு பரந்தூர் வேளாண்மை உதவி அலுவலர் உரிய ஆய்வு மேற்கொண்டு அதற்கான நடவடிக்கை எடுப்பார் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாய கூறுகையில் , இரண்டு ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட நெல் காலம் நிலை மாற்றம் காரணமாக முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் உரிய இழப்பீடு கோரி மனு அளித்ததாக தெரிவித்தார்.

கருகிய பயிருடன் வந்த விவசாயியை பார்த்த பல்வேறு தரப்பினரும் , அதை எடுத்து வந்த விவசாயம் கவலை முகத்தினை பார்த்த பலர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Updated On: 21 Aug 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...