/* */

அரசியலுக்கு வருவாரா?: கடவுளுக்கும், விஜய்க்கு மட்டுமே தெரியும்

பிரபல நடிகர் விஜய்யின் தாயாரான ஷோபா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

அரசியலுக்கு வருவாரா?:   கடவுளுக்கும், விஜய்க்கு மட்டுமே தெரியும்
X

நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர்

நடிகர் விஜயின் தயார் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

வாரிசு திரைப்படம் விஜய்ர ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் திரைப்பட நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.


காமாட்சி அம்மனை தரிசனம் செய்த பின்னர் கோவில் நிர்வாகம் அளித்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.

இதன் பின் செய்தியாளிடம் பேசுகையில், தான் எப்போதும் கோயில்களுக்கு வருவது வழக்கம் எனவும் தற்போது உலக மக்கள் அனைவரும் சிறப்புடன் நோயின்றி வாழவும் , சமாதானமாக செயல்பட பிரார்த்திக் கொண்டதாகவும் விஜய் திரைப்படம் வெற்றி பெற அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும் எனவும் , இன்று நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் வாரிசு திரைப்படம் குறித்து கேட்டபோது, இந்தத் திரைப்படம் குறித்து தனக்கு முழுமையாக தெரியாது எனவும் குடும்ப உறவை சொல்லும் திரைப்படம் என ஒரு சில வார்த்தைகளே தெரியும்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது, அது குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. விஜய் முடிவும், கடவுளின் அனுக்கிரகமும் உள்ளிட்டவைகளை பொறுத்து இருக்கும் என தெரிவித்தார்.

பிரபல திரைப்பட நடிகர்கள் வெளியாகும் படத்தின் பாடல்களை குழுவினர் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இரு ரசிகர்களும் தங்களது நடிகர்களின் புகழ்ச்சியை வலைதளங்களில் பரப்பி வரும் நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு விஜயின் தாயார் வந்தது சிறுது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய்யின் தாயாரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்ற போதெல்லாம், பொதுமக்களும் ஆர்வமாக அவர்களுடனே சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 27 Dec 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்