/* */

மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு

மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மருத்துவக்கல்லூரி  மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு
X

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் 100 சதவீதம் வக்களிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் பல்வேறு இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம், ஏனாத்தூர் , மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் நர்சிங் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் வாக்களிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ள மாதிரி வாக்கு பதிவு மையம் , வாக்கு அளிக்க பணம் பெறமாட்டோம் என குறுநாடகம், விழிப்புணர்வு இமேஜ் வடிவில் நூறு சதவீத வாக்குபதிவு என பல வகைகளில் விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜீவா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்டாக்டர் அனுராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்