வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் பரிசோதனைகளில் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் செல்ல உள்ள அனைத்து தரப்பினரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்
HIGHLIGHTS
தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தல் 2021 ன் வாக்கு எண்ணிக்கை வரும் மே இரண்டாம் தேதி அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணிக்கு துவங்க உள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் அரசு அலுவலர்கள் , வேட்பாளர்களின் முகவர்கள் , காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்து நபர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் காண்பித்த பிறகே வாக்கு மையத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான 4 சட்டமன்ற தொகுதிகள் வாக்கு எண்ணிக்கையில் பணிபுரிய உள்ள 760 அரசு அலுவலர்கள் காவல் துறையினர் , பத்திரிக்கையாளர் வேட்பாளர்களின் முகவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கான பரிசோதனை சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாக கூட்டரங்கு மற்றும் செவிலிமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுகாதார துறை அலுவலர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் குறுஞ்செய்திகள் மூலம் பரிசோதனை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் , முடிவுகள் விரைவில் அந்தந்த அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.