காஞ்சிபுரத்தில் சுகாதார வளாகத்தை திறக்க உத்தரவிட்ட ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூடப்பட்டிருந்த சுகாதார வளாகத்தை திறக்க கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள கூட்டரங்கில் அருகே பொதுமக்கள் இலவச கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
நேற்று முதல் கழிவறை பூட்டப்பட்டு காணப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி பொது இடங்களில் சிறுநீர் கழித்து சென்றுவிடுகின்றனர்.
பொது சுகாதாரத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பொது கழிவறை மூடப்பட்ட செயல் நண்பகல் இன்ஸ்டா நியூஸ் செய்தியாக வெளியானது .
இதை வாட்ஸ்அப் குழுவில் கண்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உடனடியாக சுகாதார வளாகத்தை திறந்துவிட உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து மூடப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.