/* */

காஞ்சிபுரம் : ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 481 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 481 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி .சுதாகர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 481 பேர் மீது வழக்கு பதிவு
X

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு பணிகளை பார்வையிட்ட போலீஸ் எஸ்பி சுதாகர்.

ஒமிக்ரான் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 1100 பேர் முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையினர் முக்கிய சாலைகளில் வலம் வந்தவாறு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோய் தொற்று விழிப்புணர்வு அவசியத்தை வலியுறுத்தினர்.

இதனால் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் நகரங்களில் அனைத்து கடைகளும் அடைக்ப்பட்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும், முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி வீதிகளில் சுற்றிய சுமார் 481 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு உணர்வுடன் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து காவல் துறையினரையும் காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 9 Jan 2022 3:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!