Begin typing your search above and press return to search.
கைக்குழந்தையுடன் வரிசையில் நின்று பாஜக பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 8 மாத கைக்குழந்தையுடன் வரிசையில் நின்று பாஜக பெண் வேட்பாளர் L.விஜிதா வேட்புமனு தாக்கல்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. 51 வார்டு பதவிகளுக்கான போட்டிகளுக்கு நேற்று வரை 114 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை கடைசி நாள் என்பதால் இன்று காலை முதலே திமுக, அதிமுக, பாஜக, பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அவ்வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 21 வார்டு எல்.விஜிதா என்பவர் 8 மாத கைக்குழந்தையுடன் வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் பி.எஸ்.சி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலை 5 மணி வரை வரிசையில் இருந்த எட்டு வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வேட்புமனு பெறப்பட்டது.