சட்டமன்ற தேர்தல் - காஞ்சிபுரம் மாவட்டம் முழு விபரம்
Details of Kanchipuram District
HIGHLIGHTS
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் குறித்து முழு விவரங்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை சட்டமன்ற பொது தேர்தல் நடப்பதை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்ளது. இதில் மொத்தம் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள் : 13 லட்சத்து 15 ஆயிரத்து 379 பேர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் : 26, 405 பேர்.
மொத்த வாக்கு சாவடிகள். : 1872. அதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் :. 245.தேர்தலை ஒட்டி மாவட்டத்தில் 1857 காவல்துறையினர் பணியில் உள்ளனர்.மேலும் முன்னாள் காவல் , ராணுவத்தினர் - 642 பேரும் என்எஸ்எஸ் மாணவர்கள் 250 பேர் பணியில் உள்ளனர்.வாக்குசாவடி மற்றும் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் 8 ஆயிரத்து 984 பேர் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.