விடுமுறை நாட்களில் அதிக பார்வையாளரை கவரும் அண்ணா நினைவு இல்லம்..
வார விடுமுறை நாட்களில் காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தினை அதிகளவில் குடும்பத்தினருடன் பார்வையிடும் வெளிமாவட்ட பார்வையாளர்கள்..
HIGHLIGHTS
சுற்றுலாத்தலமான காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான சி.என்.அண்ணாதுரை வாழ்ந்த இல்லம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இல்லம் அப்போதைய முதல்வர் MGR அவர்கள் தலைமையில், குடியரசு தலைவர் சஞ்சீவி ரெட்டி அவர்களால் 1980 செப்டம்பர் 16ம் நாள் திறக்கப்பட்டது. இந்த நினைவு இல்லம் தமிழக செய்தி விளம்பர துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரால் பாரமரிக்கப்பட்டு வருகிறது.
நினைவு இல்லத்தில் அண்ணாவின் புகைப்படங்கள், அவரது வாழ்க்கை வரலாறு, அவர் பயன்படுத்திய பொருட்கள், எழுதிய புத்தகங்கள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை நாள்தோறும் பொதுமக்கள், வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு தங்களது குழந்தைகளுக்கும் அண்ணா குறித்து எடுத்துரைக்கின்றனர்.
வார விடுமுறை நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது சட்டமன்ற தேர்தல் என்பதால் தங்களது தலைவர் வாழ்ந்த இடத்தினை பார்வையிட அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.