/* */

காஞ்சிபுரத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

மின்சார கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு கண்டித்து காஞ்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவலான்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யபடும், மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஓராண்டில் வீட்டு வரி உயர்வு , பால் விலை உயர்வு , தற்போது மின்கட்டண உயர்வு என பல்வேறு வகைகளில் பொதுமக்களை இன்னலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

இதனை கண்டித்து தமிழக முழுவதும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் காவலான்கேட் பகுதியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கான கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சோமசுந்தரம் , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , பகுதி கழக செயலாளர் கோல்ட்ரவி , பாலாஜி , ஸ்டாலின் , ஜெயராஜ் , ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் , அத்திவாக்கம் ரமேஷ் , களக்காட்டூர் ராஜீ மற்றும் நகர் , பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.


Updated On: 16 Sep 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...