Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் மாநகராட்சி : 5வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமதி மனுதாக்கல்
காஞ்சிபுரம் மாநகராட்சி 5வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஜெ.சுமதி வேட்புமனு தாக்கல் செய்தார்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. கடந்த மூன்று நாட்களாக 2 சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இன்று 4-வது நாளில் அதிமுக சார்பில் 5வது வார்டு பகுதியில் போட்டியிட சுமதி ஜெயக்குமார் என்பவர் தேர்தல் அலுவலர் கணேசனிடம் மனு தாக்கல் செய்திருந்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக T. தீபா என்பவரும் மனுதாக்கல் செய்தார்.
5 வது வார்டில் போட்டியிடும் சுமதி ஜெயக்குமார் என்பவர் முன்னாள் நகரமன்ற தலைவர் ஆர்.டி. சேகர் மகள் என்பதும் , இல்லதரசி என்பதும் , முதல் அதிமுக வேட்பாளர் மனுதாக்கலை துவங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.