காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நான்கு கிராம ஊராட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 11மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், 98 ஒன்றியக் குழு உறுப்பினர்களும், 273 ஊராட்சி மன்றத் தலைவர்களும், 1938 ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில் 1327 நபர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில் 7036 நபர்கள் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தில் உள்ளனர். இதில் 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் மருதம் கிராம ஊராட்சி தலைவராக ரமேஷ் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் சின்னாலம்பாடி கிராம ஊராட்சி மன்ற தலைவராக திருமதி.சுப்பம்மாள் மற்றும் புலிப்பாக்கம் கிராம ஊராட்சித் தலைவராக திருமதி.இலக்கியா சரவணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள திருமங்கலம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக ஓருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.