காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று ஒரே நாளில் 147 பேர் வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று வரை 33 நபர்கள் வேட்புமனு தாக்கல். இன்று ஒரே நாளில் 147 பேர் வேட்பு மனு தாக்கல்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட உள்ள நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக வெறும் 33 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளரை அறிவித்து பின் அமாவாசை தினம் முடிந்தபின் இன்று ஒரே நாளில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
காவல்துறை பலத்த பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை விதிகள் மூலம் வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு அனைவரும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். அவ்வகையில் இன்று ஒரே நாளில் 51 வார்டுகளுக்கான 147 வேட்புமனுக்களை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.