/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று ஒரே நாளில் 147 பேர் வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று வரை 33 நபர்கள் வேட்புமனு தாக்கல். இன்று ஒரே நாளில் 147 பேர் வேட்பு மனு தாக்கல்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று ஒரே நாளில் 147 பேர் வேட்புமனு தாக்கல்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட உள்ள நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்களாக வெறும் 33 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளரை அறிவித்து பின் அமாவாசை தினம் முடிந்தபின் இன்று ஒரே நாளில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

காவல்துறை பலத்த பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை விதிகள் மூலம் வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு அனைவரும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். அவ்வகையில் இன்று ஒரே நாளில் 51 வார்டுகளுக்கான 147 வேட்புமனுக்களை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

Updated On: 3 Feb 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!