காஞ்சிபுரத்தில் 72வது குடியரசு தின விழா
காஞ்சிபுரத்தில் நாட்டின் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
72 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் மகேஸ்வரி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்பி., ஷண்முக பிரியா தலைமையில் அளிக்கப்பட்ட அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு வண்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விடப்பட்டது.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 77 பயனாளிகளுக்கு ரூ.54.75 மதிப்பிலான நல திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் காவல்துறை துணைத்தலைவர் சாமூண்டீஸ்வரி , மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் , திட்ட இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.