உள்ளாட்சி தேர்தல் மோதல் - 5 பேருக்கு 2 வருட சிறை
வாலாஜாபாத் அருகே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற மோதலில் 5 பேருக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டத்தைச் சேர்ந்த மருதம் கிராமத்தில் கடந்த 2013 ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுகவை சேர்ந்த முருகன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயற்சித்ததாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் கடந்த 2013-ல் வழக்கு பதியப்பட்டு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இதில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் வாதிட்டார். இந்த வழக்கில் நேற்று மாலை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார், எதிரிகளான இளஞ்செழியன் , கஜேந்திரன் , ராஜேந்திரன் ராமு மற்றும் யுவராஜ் ஆகிய ஐந்து பேர்களுக்கும் இரண்டு வருட சிறை தண்டனையும் தலா 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.