/* */

தேர்தல் புறக்கணிப்பு - விவசாயிகள் அறிவிப்பு

தேர்தல் புறக்கணிப்பு - விவசாயிகள் அறிவிப்பு
X

காஞ்சிபுரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்காவிடில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக விவசாய ஆர்வலர் குழு அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது முசவரவாக்கம் கிராமம். விவசாயமே பிரதான தொழிலாக கொண்டு 2500ஏக்கர் பரப்பளவில் தற்போது நெல் பயிரிடபட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்நிலையில் கடந்த காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதற்காக கட்டித்திற்கு எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து 2லட்சம் ஒதுக்கீடும் செய்துள்ளார். இதற்காக பணிகள் நடைபெற்றும் வருகிறது.

இப்பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேளாண்மை துறை , மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் என விண்ணப்பம் செய்த நிலையில் கலெக்டரிடம் இறுதியாக தங்கள் குறைகளை தெரிவிக்க நேரில் முயன்ற போதும் தேர்தல் பணி காரணமாக சந்திக்க இயலாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் எங்களது பக்கத்து கிராமத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதனால் இந்த பருவம் தங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்படும் என்பதும் , எங்கள் கிராமத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் , தவறும் பட்சத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விவசாய ஆர்வலர் குழு சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 17 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!