தேர்தல் புறக்கணிப்பு - விவசாயிகள் அறிவிப்பு
காஞ்சிபுரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்காவிடில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக விவசாய ஆர்வலர் குழு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது முசவரவாக்கம் கிராமம். விவசாயமே பிரதான தொழிலாக கொண்டு 2500ஏக்கர் பரப்பளவில் தற்போது நெல் பயிரிடபட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்நிலையில் கடந்த காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதற்காக கட்டித்திற்கு எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து 2லட்சம் ஒதுக்கீடும் செய்துள்ளார். இதற்காக பணிகள் நடைபெற்றும் வருகிறது.
இப்பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேளாண்மை துறை , மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் என விண்ணப்பம் செய்த நிலையில் கலெக்டரிடம் இறுதியாக தங்கள் குறைகளை தெரிவிக்க நேரில் முயன்ற போதும் தேர்தல் பணி காரணமாக சந்திக்க இயலாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் எங்களது பக்கத்து கிராமத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இதனால் இந்த பருவம் தங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்படும் என்பதும் , எங்கள் கிராமத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் , தவறும் பட்சத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விவசாய ஆர்வலர் குழு சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.