Begin typing your search above and press return to search.
பட்டப்பகலில் திருடும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சிகள் வெளியானது
காஞ்சிபுரம் நகரில் பட்டப்பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் நகரை ஒட்டியுள்ளது மாருதி நகர் பகுதி. இங்கு புதிய குடியிருப்பு பகுதிகள் விரைவாக வளர்ந்து வரும் நிலையில் பட்டபகலில் இப்பகுதியில் மோட்டார்பைக்கில் வலம் வந்த 3 இளைஞர்கள் அப்பகுதியில் நோட்டமிட்டவாறே செல்வதும் யாரும் வீட்டருகே இல்லை என்பதை தெரிந்து கொண்டு வெளியே நிறுத்தி வைக்கபட்டிருந்த சைக்கிளை திருடி அலேக்காக பைக்கில் எடுத்துக் கொண்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.பட்டபகலில் எவ்வித அச்சமுமின்றி இளைஞர்கள் உலா வருவதை போலீசார் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.