காஞ்சிபுரத்தில் மூலிகை பொருட்கள் கண்காட்சி
காஞ்சிபுரத்தில் மூலிகை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
அகத்தியர் சித்தரின் பிறந்த நாளான மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நான்காவது தேசிய சித்த மருத்துவ தினம் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவர் அய்யாசாமி கலந்துகொண்டு சித்த மருத்துவத்தின் தற்போதைய தேவைகளையும், பயன்களையும் விளக்கி கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசினர் சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவத்தின் பயன்களையும், பொருட்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முலிகைசெடிகள், மூலிகை பொருட்களின் பெயர்கள் மாதிரிக்காக வைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் உதவி சித்த மருத்துவர் ராஜலட்சுமி சித்த மருத்துவர்கள் கிரிஜா முத்துக்குமார் சுஜாதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.