/* */

வெள்ளம் சூழ்ந்த திருநாவலூர் மாணவியர் விடுதி: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

திருநாவலூர் மாணவியர் விடுதியில் வெள்ளம் சூழ்ந்தது குறித்து ஒன்றிய குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வெள்ளம் சூழ்ந்த திருநாவலூர் மாணவியர் விடுதி: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
X

திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்த மாணவியர் விடுதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதி, உண்டு உறைவிடப்பள்ளி மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது. தகவலறிந்து வந்த திருநாவலூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இடுப்பளவிற்கு மேலாக கட்டிடத்திற்குள் தண்ணிர் புகுந்ததால் மாணவியர் விடுதி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களை காவலாளி ஆசிரியர்களின் துணையோடு பத்திரமாக மீட்கப்பட்டு பள்ளி வளாகத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.

ஒன்றிய குழு தலைவர் இளங்கோவன் மாணவர்களுக்கு டீ ,பிஸ்கட்,ரஸ்க் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி ஆசிரியர்களிடையே அவர்களின் நிலைகளை கேட்டறிந்து நீர் வெளியேற்றப்படும் வரையில் மாணவர்களை அவர்களின் பெற்றோர்களை வரவைத்து ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர்.

பசியில் தவித்த உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் நிலையை அறிந்து உதவி புரிந்து ஒன்றியக்குழு பெருந்தலைவர் சாந்திஇளங்கோவன் அவர்களுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 21 Nov 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்