/* */

அந்தியூர் வட்டாரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயகுமார் தேசியக்கொடியை ஏற்றினார்.

HIGHLIGHTS

அந்தியூர் வட்டாரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
X

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இன்று, இந்திய திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் வட்டாட்சியர் விஜயகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட காந்தியின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்த சுதந்திர நிகழ்ச்சியில், அந்தியூர் நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், வருவாய்த் துறையினர் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் , பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் அந்தந்த பஞ்., தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

Updated On: 15 Aug 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்