/* */

தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் சி.வி. கணேசன்

90 தொழில் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு இட வசதி, குடிநீர், ஆய்வகம் போன்ற வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது

HIGHLIGHTS

தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் சி.வி. கணேசன்
X

திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவி.கணேசன்.

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்களை சேர்த்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்தார்

திண்டுக்கல் தொழிற் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் இ. பெரியசாமி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசன் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.தொழில் பயிற்சி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தொடர்ந்து தொழில் பயிற்சி பள்ளியில் உள்ள எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், வெல்டிங், மிஷினரி உள்ளிட்ட அனைத்து ஆய்வகங்களில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவி.கணேசன் கூறியதாவது: தமிழ்நாட்டில் மொத்தம் 90 தொழில் பயிற்சி பள்ளிகள் உள்ளன.இந்த 90 தொழில் பயிற்சி பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து அங்கு பயிலும் மாணவர்களுக்கு இட வசதி, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கட்டமைப்பு வசதி இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. எந்த தொழில் பயிற்சி மையங்களில் என்னென்ன தேவைகள் இருக்கிறது. அவற்றை எல்லாம் முழுமையாக கணக்கெடுப்பு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று, அவற்றையெல்லாம் நிறைவேற்றப்படுவதற்கு தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக முதலமைச்சரின் நோக்கம் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு முழுமையான வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது . இந்த ஆண்டு பயிற்சி பள்ளி முடித்து அந்த துறையின் மூலமாக திறன் மேம்பாடு என்ற புதிய துறையை உருவாக்கி , அரசு மற்றும் தனியார் துறைகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு ஏதுவாக பயிற்சி அளிப்பதுதான் அரசின் நோக்கம். ஒரு தொழில் பயிற்சிக்கு ஆயிரம் பேர் வீதம் ஒரு லட்சம் பேர் சேர்க்கப்பட உள்ளனர். அதற்கான கட்டமைப்பு வசதிகளையும் தயார்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.

கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், திண்டுக்கல் பூட்டு தொழில் குறித்து ஏற்கெனவே ஆய்வு நடத்தி இருக்கிறோம். தனியார் தொழில் நிறுவனங்கள் மார்க்கட்டிங் அதிக அளவில் செய்வதால் திண்டுக்கல் பூட்டு விற்பனை குறைந்துள்ளது. பூட்டு தொழில் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களின் விலை, மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் விலை உயர்வு அதிகமாக உள்ளது. மூலப் பொருட்களின் விலையை குறைப்பதற்கும், பூட்டு தொழில் மார்க்கெட்டிங்கிற்கும் தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்போம் என பேசினார்.

இந்த ஆய்வில், தொழிலாளர் துறை இயக்குனர் வீரராகவராவ், மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ், தொழில் பயிற்சி பள்ளி முதல்வர் கலைச்செல்வி மற்றும் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 20 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  2. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  4. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  5. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  6. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  7. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  9. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  10. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு