/* */

முதல் தவணை 2.75 லட்சம் பேரும் 2-வது தவணை 6 லட்சம் பேரும் தடுப்பூசி போடவில்லை

தவணை காலம் கடந்தும் தடுப்பூசி செலுத்தாத 17 ஆயிரம் பேரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 90 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

முதல் தவணை  2.75  லட்சம் பேரும்   2-வது தவணை 6 லட்சம் பேரும்  தடுப்பூசி போடவில்லை
X

திண்டுக்கல் மாவட்டத்தில் 2.75 லட்சம் பேர் முதல் தவணையும், 6 லட்சம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தவணை காலம் முடிந்தும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 14½ லட்சம் பேர் முதல் தவணையும், 8 லட்சம் பேர் 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

ஆனால் 2¾ லட்சம் பேர் முதல் தவணையும், 6 லட்சம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தவில்லை. இதில் பலருக்கு முதல் தவணை காலம் முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியமாக உள்ளனர்.இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், போதிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை.

திண்டுக்கல் மாநகராட்சியில் 2-வது தவணை காலம் முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாத 17 ஆயிரம் பேரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 90 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும், இதேபோல் முதல் தவணை தடுப்பூசியை கூட செலுத்தாத மாநகராட்சி பகுதியில் 7 ஆயிரம் பேரை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெறுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 5 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  3. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  9. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  10. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு