மாணவிகள் காதலித்தால் வாழ்க்கை தொலையும்- நடிகர் அறிவுரை
மாணவிகள் காதலில் ஈடுபடக்கூடாது, மீறினால் வாழ்க்கையே தொலைந்து விடும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகர் சதீஷ் பேசினார்.
திண்டுக்கல் பிஎஸ்என்எல் கல்லூரியில் உலக மகளிர் தினம் கல்லூரி முதன்மை தலைவர் ரகுராம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நடிகர் சதீஷ் பேசுகையில், மாணவிகள் குறிப்பாக காதலில் ஈடுபடகூடாது. மீறினால் வாழ்க்கையே தொலைந்து விடும். சக மாணவர்களை தோழனாக, சகோதரனாகவே பாவிக்க வேண்டும். வருங்காலத்திலும் ஆண் பெண் சமம் அனைத்து ஜாதியினர் சமம் என நீங்கள் தான் வருங்கால சந்ததியினரை உருவாக்க வேண்டும் என பேசினார்.
விழாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய பதினொரு பெண் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மகளிர் தின விழாவிற்காக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 105 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற 86 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி தலைவர் தனலட்சுமி அம்மாள், முதல்வர் வாசுதேவன், பதிவாளர் சின்னகாளை, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.