தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடகாவுக்கு பாமக கண்டனம்: ஜி.கே.மணி
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய கர்நாடக அரசுக்கு பாமக கடும் கண்டனம் தெரிவிப்பதாக, பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, பாமக மாநில தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமாக ஜி.கே.மணி, தருமபுரியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசுக்கு, பாமக கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது. தமிழகத்தின் நீர் ஆதாரத்தை கர்நாடக அரசு தட்டிப்பறிக்கிறது. மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தென்னிந்திய பசுமை தீர்பாயத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில், 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும், 12 மாவட்டங்களில் பாசன ஆதாரமாக விழங்கும் காவிரியில் அணை கட்டும் திட்டத்தை தடுக்க, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் நீராதாரத்தை பெருக்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் அவசியம். தமிழகத்தில் அனைத்து ஆறுகளின் குறுக்கே 5 கி.மீ க்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும். தமிழக அரசு நீர் ஆதாரங்களை விட்டு கொடுக்க கூடாது. காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிடக்கூடாது. +2 பொதுத்தேர்வே போதுமானது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி சான்று உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.